Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village அழகர் கோயில் Azagarkovil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty மதுரை நாயக்கர் Madurai Nayakar
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1527
ARIE 311/1929-1930
Pre Published -
Village No 93
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2413
Book Name Azhagar Kovil kalvettukal
Author Rajendran, P; Santhalingam, C; Chandravanan, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பணம், காசு, பொன்
Locus : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - தென்பகுதி - கிழக்குச்‌ சுவர்‌.
Summary : அப்பய்யங்கார்‌ குமாரர்‌ இரங்கய்யங்கார்‌ என்பவர்‌, அழகர்‌ கோயிலிலிருந்து மதுரைக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ உள்ள அப்பன்‌ திருப்பதி என்ற கிராமத்தில்‌ திருவேங்கடமுடையாரைப்‌ பிரதிட்டை செய்துள்ளார்‌. இத்திருவேங்கட முடையாருடைய திருவாராதனைக்‌ கட்டளைக்கு. வணிகர்கள்‌ பணம்‌ வாங்கிவர இசைவு தெரிவித்து அழகர்‌ ஸ்ரீபண்டாரத்திற்கு ஆன அறுபத்தாறு தேசத்து வணிகர்கள்‌ தன்ம பட்டயம்‌ வழங்கியுள்ளனர்‌. இதன்படி பலசரக்கு, பயறு, உளுந்து, அரிசி முதலியவற்றை வணிகம்‌ செப்பும்‌ கடை வைத்திருப்போர்‌ கடை ஒன்றுக்கு ஒரு பணமும்‌, முத்து, பவளம்‌ வணிகம்‌ செய்வோர்‌ கடை ஒன்றுக்குக்‌ கால்‌ பணமும்‌, காசுக்கடை வைத்திருப்போர்‌ கடை ஒன்றுக்குக்‌ கால்‌ பணமும்‌, புடவைக்கடை. ஒன்றுக்குக்‌ கால்‌ பணமும்‌, எண்ணெய்க்கடை ஒன்றுக்கு அரை பணமும்‌, வேறு சில்லறை கடை வைத்திருப்போர்‌ கடை ஒன்றுக்கு மாகாணிப்‌ பணமும்‌, பாக்கு, மிளகு, கடலை, எள்ளு, வெல்லம்‌ போன்றவற்றை வணிகம்‌ செய்வோர்‌ பொதி ஒன்றுக்குக்‌ கால்பணமும்‌, நெல, அரிசி, தேங்காய்‌, காய்‌, பழம்‌, வெற்றிலை போன்ற பொருட்களில்‌ வணிகம்‌ செய்வோர்‌ பொதி ஒன்றுக்கு அரைக்கால்‌ பணமும்‌ சுகந்தக்‌ கடை வைத்திருப்போர்‌ கடை ஒன்றுக்கு கால்‌ பணமும்‌, கஸ்தூரி, கற்பூரம்‌, புழுகுச்சட்டம்‌ முதலான சுகந்தப்‌ பொருள்‌ விற்போர்‌ பதும பொன்‌ ஒன்றுக்கு ஒரு பணம்‌ வீதமும்‌ வழங்கிவர வேண்டும்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate