Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | புள்ளமங்கை | Pullamangai |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | குலோத்துங்கன் III | Kulottungan III |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1200 |
ARIE | 552/1921 |
Pre Published | - |
Village No | 9 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3402 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம் |
Locus | : | பிரம்மபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடக்கு, மேற்குப்புறக் குழுதம். |
---|---|---|
Summary | : | நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்துப் பிரமதேசம் புள்ளமங்கலத்துத் திருவாலந்துறையுடைய மகாதேவர்க்குத் திருநாமத்துக்காணியாக வழங்கப்பட்ட நிலத்தின் வரியினங்கள் குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டு முற்றுப் பெறவில்லை. இந்நிலம் முன்னர் நக்கன் காளி பெருமாளார் என்பவருக்குக் கொடுக்கப்பட்டி ருந்தது. அவர் அனுபவித்துக் கழிந்த பின்னர் அவனுக்கு உரிமையான நிலம், அவன் உடன் பிறந்தார் நிலம், அவன் மக்கள் நிலம், பிராமணிமார் நிலம் ஆகிய நிலங்களை விற்றுப் பாண்டி குலாசனி மாராயர் தண்டல் நிலத்தில் சேர்க்க என்று மன்னனின் ஆணை வர, அந்நிலங்கள் ஜாதிசாமந்தர், தனிகர் முன்னிலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்நிலங்களை வாங்குதற்கு யாரும் முன் வரவில்லை யாதலால், சபையோரே அந்நிலத்தைப் பெற்றுக் கொண்டு அதன் விலைக்காசை வைக்க வேண்டுமென்று பாண்டி. குலாசனி மாராயர் சபையாருக்கு அரச ஆணையாக உத்தரவு பிறப்பிக்க [கோச்செய்ய], சபையோர் ஒரு வேலி நிலத்துக்கு 80 காசும், தோட்டத்துக்கு 10 காசும் ஆக மொத்தம் 90 காசுகளை அளித்தனர். சபையோரால் இவ்வாறு காசு கொடுத்து வாங்கப் பெற்ற நிலங்கள் தான் சட்டபோகமாக நின்றோதும் சட்டர்களாகிய சாம வேதிகளுக்கும் இருக்கு வேதிகளுக்கும் அளிக்கப்பட்டது. மகாசபை உறுப்பினர்களும் மத்யஸ்தனும் கையொப்பமிட்டுள்ளனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |