Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village திருவேள்விக்குடி Thiruvelvikudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 5
Historical Year 1123
ARIE 146/1926
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3746
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, இறையிலி
Locus : மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதி பின்புறம் வடக்குச் சுவர்.
Summary : கல்வெட்டு எண் : 2, மற்றும் 3-ல் கூறப்பட்ட அதே ஞானசிவர் எடுப்பித்த திருக்கேதாரம் என்ற கோயிலில் பிரதிஷ்டை பண்ணின இறைவனுக்குத் திருவமுது உள்ளிட்ட நிமந்தங்கள் படைப்பதற்கும். அக்கோயிலில் கும்பிட வந்த மாஹேஸ்வரர் களுக்கு வேடிய செலவுகள் தொடர்பாகவும் அதே பூலோக மாணிக்கச் சபையார் நிலம் விற்றுக் கொடுத்தனர். இந்நிலமும் முன்னர் கூறியபடி இறையிலியாக வழங்கப்பட்டதால் விலைப் பொருளும் இறைப் பொருளும் சேர்த்து 61 காசுகள் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.
மேற்கூறிய 3 கல்வெட்டுகளும் ஞானசிவரால் எடுக்கப்பட்ட திருக்கேதாரம் என்னும் கோயில் தொடர்பாக உள்ளது. மேலும் இந்த ஞானசிவர் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடும்போது. ''திருவாவடுதுறையில் திருவாய்மொழிந்தருளி திருமேனிக்கும் திருக்குலத்துக்கும் நன்றாக பூஜித்திருக்கும் ஞானசிவர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது முக்கியமானது. திருவாய்மொழிந்தருளி - என்பது மன்னனின் ஆணையையே குறிப்பிடல் வேண்டுமாதலால், அரசனது நன்மைக்காகவும் அரசனது குலமாகிய சோழ குலத்தின் நன்மைக்காகவும் ஞானசிவர் திருவாவடுதுறையில் பூஜித்து வந்தார் என்பது தெளிவுள்ளது.
மேற்கூறிய நிலம் அக்கோயிலில் வேதங்களும் சாஸ்திரங்களும் ஓதுவது உள்ளிட்டவை தொடர்பாகவும் வாங்கப்பட்டது என்பதை. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 149/1926 கூறுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை படியெடுத்த போது இப்பகுதிகள் கிடைக்கவில்லை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate