Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | திருப்பெரும்புதூர் | Sriperumbudur |
Village | சிவபுரம் | Sivapuram |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | இராஜேந்திரன் I | Rajendran I |
Header | Detail |
---|---|
Regnal Year | 21 |
Historical Year | 1033 |
ARIE | 280/1959-1960 |
Pre Published | - |
Village No | 9 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3843 |
Book Name | Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4 |
Author | Vasanthi, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், காசு, கழஞ்சு, பொன், மெய்க்கீர்த்தி, வைகாசி |
Locus | : | சிவன் கோயில் அர்த்த மண்டப வடக்குச் சுவர் |
---|---|---|
Summary | : | முதலாம் இராஜேந்திரசோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு கடவூர் அரிந்தம நல்லூருடையான் நீலன் வெண் காடன் என்பவன் இக்கோயிலுக்குக் கொடுத்த பொன் துளைநிறை காசுகளை கழஞ்சாக மாற்றும் போது வந்த பொன் இருபத்தஞ்சு கழஞ்சு. இப்பொன்னுக்கு வைகாசி மாதம் முதல் ஓராண்டுக்கு ஒரு கழஞ்சுக்கு வட்டியாக ஒரு மாதத்திற்கு மஞ்சாடி பொன் நிறையுள்ள காசுகள் வீதம் 25 கழஞ்சுக்கு வட்டியாக வந்த பொன் 15 கழஞ்சு. இப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட சிலர் இப்பொன் கொண்டு ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் கோயில் இறைவனுக்கு நிலம் விலைக்கு வாங்கினர். இந்நிலத்திற்கு கட்ட வேண்டிய வரிகளையும், முதலாகச் செலுத்தப்பட்ட 25 கழஞ்சு பொன்னுக்கு வரியையும் தாங்களே செலுத்துவதாகக் கூறி, இந்நிலத்திற்கு நீர்பாய்ச்சும் உரிமைகள் பலவற்றையும் வரையறுத்துக் கூறி கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலம் ஸ்வாமி போகமாக அளிக்கபட்டதால் அந்நிலத்தி லிருந்து வரும் நெல்லு ஆண்டுக்கு நூற்றெண்பத்தேழு கலனே இரு தூணிப் பதக்கு. இந்நெல் கொண்டு கோயிலுக்கு செய்யும் நிவந்தம் கூறப்பட்டுள்ளது. (1) இறைவனுக்கு உச்சியம்போதில் [மதியம்] அமுது படைக்கின்ற போது பக்கத்தில் திருச்சுற்று மாளிகையிலே உத்தமாக்கிரமமாக வேதம் ஓதும் பிராமணர் ஐவருக்கு ஒருவருக்கு அரிசி இருநாழி வீதம் ஐவருக்கும் நெல்லும், நெய்யும் புழுக்குக்கறி, மிளகுப்பொடி கலந்த கறி, மரக்கறி மூன்று, மிளகு, உப்பு, தயிர், பாக்கு வெற்றிலை, விறகு, ஐந்து இலையிட்டு உண்ணும் பிராமணன் ஒருவருக்கும் நெல்லு, புடவை முதல் ஆகியனவற்றிற்கு ஒருவர்க்கு ஆகும் செலவு வீதம் ஐவர்க்கு ஆகும் செலவுகள் மேற்கூறிய ஒவ்வொன்றுக்கும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அறுதியிட்டு கூறிய பின் கோயில் ஸ்ரீகாரியம் பார்ப்பார், உண்ணாழிகை உடையார் சிவ பண்டாரிகள், தேவகன்மிகள் ஆகியோர் கல்லில் வெட்டுவித்தனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |