Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | திருப்பருத்திகுன்றம் | Thiruparuthikundram |
Village | பள்ளன் கோவில் | Pallankovil |
Language | தமிழ் & சமஸ்கிருதம் | Tamil & Sanskrit |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | பல்லவர் | Pallava |
King | சிம்மவர்மன் | Simavarman |
Header | Detail |
---|---|
Regnal Year | 6 |
Historical Year | 546 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3886 |
Book Name | Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4 |
Author | Vasanthi, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
கொடை, சமணம், பள்ளி |
Locus | : | பள்ளார்கோவில் |
---|---|---|
Summary | : | இச்செப்பேடு திருப்பருத்திக்குன்றம் கோயிலுக்குக் கொடையளித்தச் செய்தி கூறப்படுவதால் இந்நூலில் திருப்பருத்திக்குன்றம் கல்வெட்டுகள் உள்ள பகுதியில் வெளியிடப்படுகின்றது. பல்லவர் செப்பேடுகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளச் செப்பேட்டு வாசகம் அவ்வாறே எடுத்து தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ளச் செப்பேடுகளில் தமிழில் அரச ஆணையைக் கொண்டுள்ள மிகவும் தொன்மையானச் செப்பேடு இதுவேயாகும். நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பள்ளன்கோயில் என்ற இடத்தில் இச் செப்பேடு கிடைத்தது. திருப்பத்திகுன்றத்துக் கோயிலுக்கு பள்ளிச்சந்தமாக கொடையளித்தச் செய்தி. சிம்மவர்மனின் மகனும் முதலாம் மகேந்திரனின் தந்தையுமாகிய சிம்மவிஷ்ணு பல்லவர் ஆட்சியைக் காவிரிக்கரை வரையில் விரித்ததை இச்செப்பேட்டின் சமஸ்கிருதப் பகுதி கூறுகிறது. மேலும் திருப்பருத்திக் குன்றில் வாழ்ந்த நந்திசங்கத்தைச் சார்ந்த வஜ்ஜிரநந்தி என்ற சமண முனிவருக்கு ஓர் ஊரைப் பள்ளிச்சந்தமாகக் கொடுத்ததைச் சமஸ்கிருதப் பகுதி கூறுகிறது. அதே ஆணை சற்று விரிவாகத் தமிழ்ப் பகுதியிலும் கூறப்பட்டுள்ளது. இச்செப்பேட்டினை பற்றி விரிவாக அறிந்து கொள்ள பல்லவர் செப்பேடுகள் முப்பது என்ற நூலைக் காண்க. இச்செப்பேட்டிலிருந்து கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலேயே அரச ஆணை எவ்வாறு அளிக்கப்பட்டது, அதை எவ்வாறு ஊரார் பெற்று அதன்படி நடந்தனர் என்பதை இச்செப்பேட்டில் காணலாம். கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலேயே எவ்வளவு தெளிவாக ஆட்சி செயல்பட்டது என்பதற்கும் இச்செப்பேடு எடுத்துக்காட்டாக அமைகின்றது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |