Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | உத்திரமேரூர் | Uthiramerur |
Village | காவாந்தண்டலம் | Kavanthandalam |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | பல்லவர் | Pallava |
King | கம்பவர்மன் | Kampavarman |
Header | Detail |
---|---|
Regnal Year | 18 |
Historical Year | 900 |
ARIE | 208/1901 |
Pre Published | - |
Village No | 7 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3948 |
Book Name | Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4 |
Author | Vasanthi, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
விளக்கு, கழஞ்சு, பொன், சித்திரை |
Locus | : | இலட்சுமிநாராயணசாமி கோயில் கருவறைத் தெற்கு முப்பட்டைக் குமுதம். |
---|---|---|
Summary | : | வேங்கை நாட்டு குளனூர் என்னும் ஊரைச் சேர்ந்த மானசர்வ்வன் என்பவன் இவ்வூர் விஷ்ணு கோயிலை எடுப்பித்துள்ளான் என்பதை இவ்வூர் ஊ.க. எண்.6இல் கண்டோம். அவனது பெயராலேயே 'மானசர்வ்வ விஷ்ணுகிருகம்' என்று இக்கோயில் அழைக்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டால் அறிகிறோம். இவ்வூர் சபையார் இக்கோயிலிருந்து இவ்வூர் பொன் நிறுத்தப்படும் கல்லால் நிறுத்தப்பட்ட 30 கழஞ்சுப் பொன்னினைப் பெற்றுக் கொண்டனர். இக்கழஞ்சுப் பொன் ஒன்றிற்கு மாத வட்டியாக 4 மஞ்சாடி வீதம் வழங்க வேண்டும். இந்த முப்பது கழஞ்சுப் பொன்னில் 20 கழஞ்சுப் பொன் வழியாக ஆண்டொன்றுக்கு வந்த வட்டி 4 கழஞ்சு மூலம் சித்திரை திருவோணத் திருவிழா ஏழு நாளும் நூறு விளக்குகள் வைக்கவும், கீற்றுத் தட்டி கொட்டகை அமைத்து இறைவனுக்கு நீராடல் செய்து இறைவனுக்கு உணவு படைக்கவும் வேண்டும். கோயிலில் பெற்ற 30 பொன்னின் மீதமுள்ள 10 கழஞ்சுப் பொன்னிலிருந்து ஆண்டு வட்டியாக வரும் இரண்டு கழஞ்சினைக் கொண்டு, கோயில் உண்ணாழிகை (கருவறை)யில் இரண்டு விளக்கெரிக்க தினமும் உரி அளவு எண்ணெய்யை இவ்வூர் எண்ணெய் வியாபாரிகள் வைப்பதற்கும், இவ்வூர் சபையார் சம்மதித்துள்ளனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |