1146 results found
காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>திருவானைக் கோயில்
காஞ்சிபுரம் வல்ல நாட்டு நென்மலி ஊரிலுள்ள நஞ்சை புஞ்சை நிலங்கள் சிலவற்றினைச் சேர்த்து ‘குலோத்துங்க சோழன் திருநீற்றுச்சோழ நல்லூர்’ என்னும் பெயரிட்டு புதிய ஊர் ஒன்றினை உருவாக்கி திருவாலக்கோயில் மகாதேவர் கோயில் இறைவன் வழிபாட்டுக்காக மன்னன் குலோத்துங்கள் வழங்கிய நேரடி ஆணையாகும். இவ்வாணையை தொண்டைமான் என்னும் குறுநிலத் தலைவன் செயல்படுத்திட ஆணையிட்டுள்ளான்.காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>புலிப்பாக்கம்
காஞ்சிபுரம் புலிப்பாக்கம் ஊர்க்கணக்கன் நூற்றெண்மப் பிரியன் பூமாங்கழல் பிச்சதேவன் பொன்மலை உடையான் கனகராயன் என்பவன் புலிப்பாக்கம் என்கிற சோளசிகாமணிச் சதுர்வேதி மங்கலத்து பொன்மலை உடையார் கோயிலில் இவன் எழுந்தருளித்த சுந்தரபாண்டிய நாயகர்க்கும், நாச்சியார்க்கும் அமுதுபடி மற்றும் சாத்துப்படி வழிபாட்டுத் தேவைகளுக்காகக் குடிநீங்கா தேவதானமாக அளித்து, அந்நிலத்தின் வழியாகக் கொடுக்கப்படும் வரிகளையும் நீக்கி கோயிலுக்குத் தானமாக அளித்துள்ள மன்னனின் ஆணையாகும். மேற்படி, மத்யஸ்தன் கனகராயன் என்பவன் விசயகண்ட கோபலனின் 14-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளான். இக்கல்வெட்டில் இவர் எடுப்பித்துள்ள இறைவனுக்குச் சுந்தரபாண்டியர் நாயகர் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளதால், இக்கல்வெட்டு சுந்தரபாண்டியன் காலத்தியது என உணரலாம். எனவே விசையகண்டகோபாலனின் காலத்திற்கு சமகாலத்தவனான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு இது எனலாம்.காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>புலிப்பாக்கம்
காஞ்சிபுரம் களத்தூர் கோட்டத்து வல்லநாட்டு புலிப்பாக்கம் என்றழைக்கப்படும் சோழ சிகாமணிச் சதுவேதிமங்கலத்து பொன்மலை உடைய நாயனார் கோயில் இறைவனுக்கும் புலிப்பாக்கத்துக் கணக்கன் (மத்யஸ்தன்) பெரியான் எனும் நாற்பத்ததெண்ணாயிர வேளான் என்பவன், ஒரு சந்தி விளக்கு எரிக்க இக்கோயிலில் காணியுடைய சிவபிராமணர்களிடம் மூன்று பசுக்கள் தானமளித்துள்ளான்.காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>புலிப்பாக்கம்
காஞ்சிபுரம் புலிப்பாக்கம் என்கிற சோழ சிகாமணிச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபொன்மலை உடையார் கோயில் திருநடைமாளிகையில் இவ்வூரைச் சார்ந்த குரவசேரி சோமிதேவ பட்டன் ஆட்கொண்டான் என்றழைக்கப்படும் தொண்டை மண்டலத்துப் பிள்ளை என்பவன் தனது பெயரால் ‘ஆட்கொண்டதேவர் (சிவலிங்கம்) உருவினை எடுப்பித்துள்ளான். இந்த இறைவனுக்குப் பூசை, அமுது மற்றும் கறியமுது போன்றவற்றிற்காக 10 கழஞ்சுப் பொன்னினை இக்கோயில் சிவப் பிராமணர்களிடம் கொடுத்துள்ளான். இப்பொன்னின் மூலம் தினமும் தூணிப் பதக்கு அளவு திருமஞ்சனமும், திருப்பளித்தாமமும் (இறைவனுக்கு சாத்தும் மாலை), இரண்டு சந்தி விளக்கும், நான்கு நாழி அளவு அரிசி திருவமுதும், கறியமுதும் வைத்து இறைவனுக்கு வழிபாடு செய்வதாக இக்கோயில் சிவப் பிராமணர்கள் உறுதியளித்து உடன்படிக்கை எழுதிக் கொடுத்துள்ளனர்.காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>புலிப்பாக்கம்
காஞ்சிபுரம் களத்தூர்க் கோட்டத்துப் புலிப்பாக்கம் எனும் சோழ சிகாமணிச் சதுர்வேதி மங்கலத்துப் பொன்மலை உடைய நாயனார் கோயில் இறைவனுக்கு ஒரு சந்தி விளக்கு வைக்க பைய்யூர் கோட்டத்து நெய்தல்வாயில் ஊர் தலைவன் செம்பியதரையன் என்பவன் மூன்று பசுக்களைத் தானமளித்துள்ளான்.காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>புலிப்பாக்கம்
காஞ்சிபுரம் புலிப்பாக்கம் என்கிற சோழ சிகாமணிச் சதுர்வேதி மங்கலம் ஊரிலுள்ள ஸ்ரீபொன்மலை உடைய நாயனார் கோயில் இறைவன் முன் ஒரு சந்தி விளக்கு எரிப்பதற்கு, இவ்வூரைச் சார்ந்த குரவசேரி ஆட்கொண்டான் என்னும் தொண்டை மண்டலப் பிள்ளை என்பவரிடமிருந்து ஒரு பசுவும், நாகு (பெண் கன்று) இரண்டும் இக்கோயில் காணியுடைய காஞ்சிக்குறிக் கவுசிகன் பிச்சன் எனும் திருஞானசம்பந்த பட்டன் என்பவன் பெற்றுக் கொண்டு விளக்கெரிப்பதாக உடன்படிக்கை எழுதிக் கொடுத்துள்ளான்.காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>புலிப்பாக்கம்
காஞ்சிபுரம் புலிப்பாக்கம் எனும் சோழ சிகாமணிச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபொன்மலை உடைய நாயனார் கோயில் இறைவன் முன் சந்தி விளக்கு ஒன்று எரிக்க, இவ்வூரைச் சார்ந்த குரவசேரி ஆட்கொண்டான் என்கிற தொண்டை மண்டலத்து பிள்ளை என்பவன் மூன்று பழங்காசுகளை இக்கோயில் சிவபிராமணன் சந்திரசேகர பட்டன் என்பவனிடம் வழங்கி சந்திவிளக்கு எரிக்க வழிவகைச் செய்துள்ளான்.காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>புலிப்பாக்கம்
காஞ்சிபுரம் ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் களத்தூர் கோட்டத்து புலிப்பாக்கம் என்கிற சோழ சிகாமணி சதுர்வேதி மங்கலத்து ‘ஸ்ரீபொன்மலை உடைய நாயனார் இறைவன் முன் நெய் விளக்கெரிக்க, இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிக்கும் பக்தர் திருவையாறு ஊரைச் சார்ந்த திருச்சிற்றம்பலமுடையான் என்பவன், இக்கோயில் சிவபிராமணன் காக்கும் பிரான்பட்டன் என்பவனிடம் மூன்று பசுக்களைத் தானமாக வழங்கியுள்ளான்.செங்கல்பட்டு>செங்கல்பட்டு>பாலூர்
செங்கல்பட்டு சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனின் அதிகாரி நந்தியராயன் என்பவன் ஊற்றுக்காட்டுக் கோட்டத்துப் பாலையூர் நாட்டு பாலையூர் என்கிற இராசேந்திர சோழ நல்லூர் திருப்பதங்காடுடையார் கோயிலுக்குரிய திருநாமத்துக்காணி, தேவதானம் ஆகிய நிலங்கள் மீது வசூலிக்கப்படும் வரிகள், தறிஇறையாகப் பெறப்படும் காசு, செக்குக்குடியினர் கொடுக்கும் எண்ணெய் மற்றும் காசுகள் ஆகியவற்றினை, இக்கோயில் இறைவனின் பூசைக்கும், கோயில் திருப்பணிக்கும் முதலீடாக வைத்துக் கொள்ள மன்னனிடம் கேட்டுக் கொண்டார். மன்னனும் இருபத்தொன்பதாவது ஆண்டு முதல் திருப்பணிக்கும், பூசைக்கும் முதலீடாக வைத்துகொள்ள ஆணை வழங்கியுள்ளான்.செங்கல்பட்டு>செங்கல்பட்டு>பாலூர்
செங்கல்பட்டு கல்வெட்டு வரிகளின் இறுதிப்பகுதி கட்டடப் பகுதிக்குள் மறைந்துள்ளது. இக்கோயிலைச் சார்ந்த சிவப் பிராமணர்கள் இருவர் இவ்வூரினர் சிலரிடமிருந்து இரண்டாயிரம் குழி நிலம் மற்றும் கிணறு ஒன்றும் பெற்றுக்கொண்டு, இறைவன் முன் இரண்டு திருநந்தா விளக்குகள் விளக்கெரிப்பதாகச் சம்மதித்து உடன்படிக்கைச் செய்து கொடுத்துள்ளனர்.செங்கல்பட்டு>செங்கல்பட்டு>பாலூர்
செங்கல்பட்டு ஊற்றுக்காட்டுக் கோட்டத்துப் பாலையூர் நாட்டு பாலையூர் என்கிற இராசேந்திரசோழ நல்லூர் திருப்பதங்காடு உடைய மகாதேவர் கோயிலுக்கு, அமாவாசை அன்று யாத்திரை மேற்கொண்டு இறைவனைத் தரிசிக்க வரும் பிராமணர்களுக்கு ஆசாரசீலன் மடத்தில் உணவளிப்பதற்காக, சோழ மண்டலத்து பாண்டிகுலாசனி வளநாட்டு குறிச்சி ஊரைச் சார்ந்த அபிமானமேரு பல்லவரையன் என்பவன் மடப்புறமாக நிலம் ஒன்றினை வழங்கியுள்ளான்.செங்கல்பட்டு>செங்கல்பட்டு>பாலூர்
செங்கல்பட்டு முதல் இரு வரிகள் வீரமே துணையாகத் தொடங்கும் மெய்க்கீர்த்தி வீரராசேந்திரனுக்கு உரியதாகும். அதனைத் தொடர்ந்து முதலாம் குலோத்துங்கனின் புகழ்மாது விளங்க என்னும் மெய்க்கீர்த்தியோடு இடம்பெறுகிறது இக்கல்வெட்டு.ஊற்றுக்காட்டுக் கோட்டத்து பாலையூர் எனும் இராசேந்திரசோழ நல்லூர் திருபதங்காடு மகாதேவர் இறைவனுக்கு விளக்கெரிக்க மைய்யூர் நாட்டு இராசேந்திரபுரத்து எண்ணெய் வாணியர் (சங்கரபாடியார்கள்) எண்ணெய் தானமாக வழங்கியுள்ளனர்.