Skip to main content

1128 results found

விருதுநகர்>சிவகாசி>எதிர்கோட்டை
- வெண்பைக்குடிநாட்டு கூத்தன்குடியைச் சார்ந்த சுனைக்குடி இறைவனுக்கு கூலிச் சேவகன் மாறன்பட்டன் என்பவன் அணைக்குடியில் ஏற்பட்ட பூசலில்இறந்துவிட்டான். அவனைச் சார்த்தி மாகணக்குடி கேசவன் ஒருவன் சுனைக்குடி கோயிலுக்குப் பொன் அளித்ததைக் கூறும் கல்வெட்டாக இது இருக்க வேண்டும். கல்வெட்டின் முடிவு இல்லை. எனவே கல்வெட்டின் நோக்கத்தை முழுவதுமாக அறியமுடியவில்லை.
விருதுநகர்>சிவகாசி>ஈஞ்சார்
- இவ்வூர் சிவன் கோயிலுக்கு இறையிலியாக நிலம் அளக்கப்பட்டதைக் கூறும் அரசாணை இதுவாகும். இக்கோயிலில் இருந்த பரிவார தெய்வமான சுப்பிமணியப் பிள்ளையார்க்கும் ஒரு மா நிலம் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.
விருதுநகர்>சிவகாசி>ஈஞ்சார்
- கோயிலுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலங்களிலிருந்து ஒவ்வொருவகை நிலத்திலும் எவ்வளவு வரி பெற வேண்டும் என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.
விருதுநகர்>சிவகாசி>ஈஞ்சார்
- தேய்தான இறையிலியாய் நிலமளித்ததைக் கூறுகிறது.
விருதுநகர்>சிவகாசி>ஈஞ்சார்
- தடங்கண்ணியில் (ஈஞ்சார்) சோறனுய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன் என்பவன் சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என்ற பெயரில் சிவன் கோவில் எடுப்பித்து அதற்குத் திருப்படிமாற்று உள்ளிட்டு செலவினங்களுக்குத் தேவதான இறையிலியாக நிலமளித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இவ்விறைவர்க்கு உடைப்பன் குளத்து வருவாயில் கால்பங்கு இறைவன் இறைவி பூசைக்காகக் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இவ்வூர் இறைவன் மீது பக்தி கொண்டவரின் செயல்பாடு.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இவ்வூர் இறைவர்க்கு திருநந்தா விளக்கெரிக்க மற்றும் நிலம் தானமாகக் கொடுத்த செய்தியினைத் தெரிவிக்கின்றது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இவ்வூர் இறைவர்க்கு மல்லி நாட்டுக் காடனூர் கொற்றங்கிழவன் என்பவன் கொடுத்த திருநந்தா விளக்கினுக்காக கொடுத்த ஆடு முப்தொன்று பற்றிக் குறிப்பிடுகின்றது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இவ்வூர் இறைவர்க்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக இவ்வூரினனான முற்கலன் நாராயணனான சங்கர நாராயணன் என்பன் நிலமும் கிணறு ஒன்றையும் நந்தா விளக்குப்புரமாகத் தானம் வழங்கிய செய்தியினைத் தெரிவிக்கின்றது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இவ்வூர் இறைவர்க்கு திருமடைப் பள்ளிப் புறமாக சடையன் குறிச்சியிலுள்ள நிலங்கள் தானமாக வழங்கப்பட்தைத் தெரிவிக்கின்றது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இவ்வூர் இறைவர்க்கு ஒரு நந்தா விளக்குக்காக நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது. இத்தானத்தைச் செய்தவன் திருவரங்கச் செல்வனான திருமலையாழ்வான் என்பவனாவான்.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இக்கோயில் இறைவர்க்கும் நித்தியபூசைக்கும் மற்றும் உள்ள தேவைகளுக்குமாக நிலமும் நிலத்தால் வந்த வரிகளும் இக்கோயில் சபையாரிடம் தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தியினைத் தருகின்றது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- குண்டின கோத்திரத்தைச் சேர்ந்த திருவரங்க தேவன் குன்றெடுத்தானும் இவன் தம்பி திருவரங்க தேவனுய்யக் கொள்வானும் திருத்தங்கல் மலைமேலுள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயிலுக்கு இரண்டு மா நிலத்தை வழங்கியுள்ளனர். வைகாசித் திருவிசாக நன்னாளில் பால்மாங்காயமுது செய்யவும் இறைவன் மண்டபத்தே ஏறியருளித் திருமஞ்சனம் செய்யவும் வேண்டி இந்நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளதாக கருதலாம்.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- கருநிலக்குடி நாட்டு ஆனையூரான தென்னவன் சிற்றூர் திருத்தங்கல் திருமலை மேல் நின்றருல்கின்ற பெருமாளுக்குரிய தேவதான இறையிலியாக இருந்துள்ளது. இதன்படி வெட்டப்பட்டிருந்த கல்வெட்டின்படியே கடமையிறுப்பதை உறுதி செய்யும் வாசகமாக இக்கல்வெட்டு காணப்படுகிறது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இவ்வூர் இறைவர்க்கும், சந்திபூசைக்கும் மற்றும் உள்ள கோயில் வைஷ்ணவர், நம்பு செய்பவர்களுக்குமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தானத்தைப் பற்றிக் குறிக்கிறது. இத்தானத்தை மழவராயன் எனும் மந்திரி அரசனுக்குச் சொல்லி நடப்பித்ததாகக் குறிப்பிடுகின்றது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- இக்கோயில் மூலபருஷையரிடம் இறைவனின் நித்திய பூசைக்காக கொடுக்கப்பட்ட தானம்பற்றிய செய்தியினைத் தருகின்றது.
விருதுநகர்>சிவகாசி>திருத்தங்கல்
- திருத்தங்கல் திருமலை மேல் நின்று அருள்புரிகின்ற பெருமாள் கோயில் இறைவன் அம்மவாசை தோறும் எழுந்தருளப்பட்டு புறப்பாடு செய்யப்பட்டுள்ளார். இந்தப் புறப்பாட்டிற்கான செலவினங்களுக்காக வேண்டி ஒன்றரையே ஒருமா நிலம் நிலக்கொடையாக வழங்கப்பட்டிருந்துள்ளது.
விருதுநகர்>சாத்தூர்>பெரிய கொல்லப்பட்டி
Engraved on the ceiling of Satthurappan mantapa at Periya Kollappatti village. Ettayapuram Jamindar Ramasamy Kechchilappa Nayakkar. Dated 1844 A. D. Registers the construction of an utsava mandapa by the wife of Kechchilappa Nayakkar. நாயக்கரின் மனைவி சாத்தூரப்பனை இறைவன்) எழுந்தருளுவிக்க மண்டபம் கட்டியதைக் கூறுகிறது.
விருதுநகர்>திருச்சுழியல்>கல்லுமடை
On the southern adhisthana of the same temple same king. Dated 1264 A. D. Donation of the village Kuru seyvan Embal to the temple by one Muthaliyar Puvanan alias Srithunga Devar a resident of Rajendram in Irasasinga Kulakkil. திருப்பாலையூர் இறைவனுக்க இராசசிங்க குளக்கீழ் இராசேந்திரத்து முதலியார் பூவணவரான சிதுங்கதேவர் கூறு செய்வான் ஏம்பலை ஊரவரிடமிருந்து விலைக்கு வாங்கி தானமாகத் தந்ததைத் தெரிவிக்கிறது.