Skip to main content

54 results found

தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>திருத்தெங்கூர்
மூதலில் இக்கோயில் உடையாரின் தேவதான இருவிளக்குப்புற நிலத்தினைத் திருத்தெங்கூர் வியாபாரிகள் விலைக்கு வாங்கி, திருத்தெங்கூர் போயனுக்கு வேட்டைப் பேருக வழங்கியிருந்தனர். தற்போது, தாம் வேறு நிலம் கொடுக்க எண்ணியதால், முதலில் வாங்கிய நிலத்தினையும், அதற்கெனத் தாம் கொடுத்த காசு ஐம்பதையும் கோயிலுக்கே திருநாமத்துக் காணியாக அளிக்கின்றனர். இந்தக் கொடை தருவதால், அவ்வியாபாரிகள் தரவேண்டிய எண்ணெய் வரியின்று விலக்களிக்கப்படுகறது. இதனைக் கோயில் ஸ்ரீகார்யம் செய்வார், ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணிகள், தேவகன்மி, கோயிற்கணக்கர் ஆகியோரே செய்து தருகின்றனர், அவர்களின் பெயர்களும் காணப்படுகின்றன.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- திருக்கோடிகா உடையார் கோயில் தேவகன்மிகள், கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் மனுவூருடையார் வலந்தரும் கூத்தப் பெருமாளுக்கு எழுதிக்கொடுத்த பிரமாண இசைவுத் தீட்டு இது. தியாக வினோத விழுப்பரையரின் காணியான அரைமாவும், இவரது குருவான வலந்தரும் கூத்தப்பெருமாளுக்குக் கொடையாகக் கொடுத்த நிலம் அரைமாவும் ஆக ஒருமா நிலம் இறையிலி செய்து கொடுக்கப் பட்டது.
இந்நிலம் இறையிலி செய்து கொடுத்ததற்கு மாற்றாக, இக்கோயிலின் தேவதானம் கண்ணமங்கலத்திலுள்ள இரண்டு மா நிலத்தினைத் திருநாமத்துக் காணியாக்கி, அதிலிருந்து வரும் நெல்லினைப் பண்டாரத்தில் அளக்க வேண்டும் எனவும், அந்நிலத்தினைத் திருநாமத்துக் காணியாக அளிக்க வேண்டுமெனவும் இக்கோயில் தானத்தாரும், மாஹேஸ்வரரும் வேண்டிக் கொண்டதற்கிணங்க இது அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுச் சுட்டுகிறது. மேலும் திருக்கோடிக்காவுடையார் கோயில் திருப்பணிக்கு 150 காசு கொடுக்கப்பட்டதையும் இக்கல்வெட்டு மூலம் அறிகிறோம். வலந்தரும் கூத்தப் பெருமாள் ஒரு குரு என்பதையும், அவர் இத்திருக்கோடி காவுடையார் கோயிலில் குருஸ்தானமாகத் திருப்பெருந்துறை ஆளுடையாரை எழுந்தருளுவித்தார் என்ற செய்தியையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கோயில் கணக்கர், தேவகன்மி, ஸ்ரீகார்யம், சைவாச்சார்யர், மாஹேஸ்வரக் கண்காணி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். கல்வெட்டு இடையிடையே பெரிதும் சிதைந்து விட்டதால் தெளிவாகத் தொடர்ச்சியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது. இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. எனினும் கிடைத்துள்ள பகுதியிலிருந்து, பல்லவராசன். என்ற அதிகாரியின் விண்ணப்பத்தின்படி குலோத்துங்கன் விடுத்த ஆணையொன்றை இக்கல்வெட்டுக் குறிப்பதாகத் தெரிகிறது. இவ்வாணை, இக்கோயில் தேவகன்மிகளுக்கும், மகேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் இருக்கும் விருதராச பயங்கர வளநாட்டுக்கு நீர்பாய்வதற்காக முன்பு பழைய குறுக்கை வாய்க்கால் என்ற ஒரு வாய்க்கால் தோற்றுவிக்கப் பட்டது. அப்போது இக்கோயிலுக்குரிய தேவதான நிலப்பகுதிகளிலும் அவ் வாய்க்கால் தோண்டப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்தின் கிழக்கே கடுவன் வாய்க்காலென்ற ஒரு வாய்க்கால் புதிதாக அமைக்கப்பட்டு விட்டதால், (முன்னது பயன்படவில்லை போலும்) முதலில் தோண்டப்பட்ட தேவதான நிலப்பகுதிகளை மீண்டும் தூர்த்துக் கோயிலுக்கே அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- பூதலூர் வட்டத்து பூதலூரில் எழுந்தருளுவித்த குலோத்துங்க சோழ ஈஸ்ரமுடையார் கோயில் தேவகன்மிக்கும், கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வானுக்கும் இக்கோயிலுக்கு வேண்டிய நிவந்தங்கள் இறுப்பதற்காக எத்திகிரி கொண்ட சோழ நல்லூர். . . மருத்] துவக்குடி உட்பட்ட இடத்தில் நிலம் அளிக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. பின்னர் அந்நிலங்கள் தேவதான இறையிலியாக ஆக்கப்பட்ட ஆணையைத் திருமந்திர ஓலை இராசநாராயண மூவேந்தவேளான் எழுத, சாட்சிக் கையெழுத்தும் பலர் இட்டனர் என்பதை இக்கல்வெட்டால் அறியலாம்.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- பாண்டிக் குலபதி வளநாட்டு ஏரியூர் வல்லத்து உடையார் கரிகால் சோளீசுவரமுடைய நாயனார் கோயிலுக்கு இவ்வூரவர் முன்சாமங்கள் பூசைக்கும் திருப்பணிக்குமாக நெற்பொதிக்கும், உப்புப்பொதிக்கும், நெற்கோட்டை ஒன்றுக்கும், ஆயம் ஆக வந்த காசினை விழுக்காட்டுப்படி பெற்று ஆதிசண்டேசுவர தேவகன்மியிடமும் ஸ்ரீருத்ரமாகேசுவரக் கண்காணி செய்வார்களிடமும் அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கடலூர்>காட்டுமன்னார் கோயில்>திருமூலஸ்தானம்
- இக்கோயில் இறைவனுக்கு திருநுந்தா விளக்கு ஒன்றை, இக்கோயில் ஸ்ரீகாரியஞ்செய்வார்களும், ஸ்ரீமாகேசுவர கண்காணி செய்வார்களும் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது.
கடலூர்>காட்டுமன்னார் கோயில்>மேலக்கடம்பூர்
- முதலாம் குலோத்துங்களின் 43-வது ஆட்சியாண்டில் விருதராஜ பயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு கடம்பூர் சிவபிராமணன் கெளசிகன் பவழம் அகத்தசுவரமுடையான் தொண்டநாயகபட்டன், கெளசிகன் பிச்சன். சோதிகோசரிபட்டன் ஆடியருளுவான், மாகேசுவரகண்காணி விளக்குபிச்சன் ஆகியோர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து வேளிமா நாட்டு இரையூர் ஊர்த் தலைவன் சாணன் குடியைச் சார்ந்த ஏறன் என்பானிடமிருந்து ஆறுகாசுகள் பெற்றுக்கொண்டு இக்கோயிலில் திருநந்தா விளக்கு எரிக்க சம்மதித்தச் செய்தி.
பெரம்பலூர்>பெரம்பலூர்>சித்தளி
Same village. Inscribed on the flight of steps lead to Natarajar shrnie at Soundaresvarar temple. 18 C. A. D. Fragmentary inscription. seems to be a land donation as Thirunamathukkani. சில எழுத்துக்கள் சிமெண்ட்டால் பூசப்பட்டுள்ளன. குன்றக்கூற்றத்து சிற்றகழி உடைய திருவீரட்டானமுடைய நாயநார் கோயிலில் பணிசெய்த சிவபிராமணர்கள், கண்காணி செய்பவர்கள், கோயிலுக்குச் சொந்தமான பத்துமா நிலத்தை தாங்கள் பயிர்செய்து அதற்கு ஈடாக பத்து விளக்குகள் எரிக்க ஒப்புக் கொண்ட செய்தியைக் கூறுகிறது. சிற்றகழி என்ற ஊர் தற்போது சித்தளி என்ற அழைக்கப்படுகிறது.
திருவாரூர்>மன்னார்குடி>திருமக்கோட்டை
- தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கப்பா அய்யனும் பள்ளிப்பட்டூர் வீற்றிருந்தார்பிள்ளையின் மகள் நயினார்பிள்ளை என்பவரும், மெய்க்குநாயனாராகிய இக்கோயில் இறைவனுக்கு நிலமும் மனையும் குளமும் தாளமாக வழங்கினர். இவற்ற வருவாயிலிருந்து திந்திரி ஓதாம் எனக் கூறப்படும் புளியோதரை படைப்பதற்கு நாள் ஒன்றுக்கு குறுணி (மரக்கால்) அளவு அமுதுபடி செய்து நெய்வேத்தியமும் செய்யவேண்டும். குறுணி அரிசி பிரசாதத்தில் இரு நாழி பிரசாதம் தன்மத்தரவுக்காகவும், மீதி அறுநாழி பிரசாதத்தில் கன்தவனத்தில் பணிபுரிவோருக்கு மூன்று நாழி பிரசாதமும் மீதியை வரைப்பு நாட்டு நம்பிக்கு உரி, சோமாசி நம்பிக்கு உரி, முதலியார்க்கு உரி, மாடாபத்தியத்துக்கு உரி, கண்காணிக்கு உரி, மெய் காவலுக்கு உரியுமாகப் பிரித்துக் கொடுக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தன்மத்தரவுக்கும் நந்தவனத்துக்கும் முறையே 2+3 (5) நாழிடப் போக மீதி மூன்று நாழி அறுவர்க்கு உரி வீதம் பிரிந்துப் கொடுக்கப்பட்டிருப்பதால் உயி என்பது | நாழி என்ற அளவு என்பதும் 8 நாழி ஒரு குறுணி (மரக்கால்) என்பறும் இக்கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.
நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>கொருக்கை
- விக்கிரமசோழனுடைய மெய்க்கீர்த்தியுடன் இக்கல்வெட்டு தொடங்குகிறது. சிவ பிராமணன் காஸ்யபன் உமாசகிதன் பெரியானான நானூற்றுவ பட்டனும் இவன் தம்பி திருச்சிற்றம்பலமுடையான் பொற் கோயில் பட்டனும் காஸ்யபன் அச்சுதன் உமாசகித வீரவினோத பட்டனும் காஸ்யபன் பதஞ்சலி பொன்னனான வீரட்டான பட்டனும். . . போன்றோர் கோயிற் காணி செய்வார்க்கும் கோயில் மாகேஸ்வரக் கண்காணி செய்வார்க்கும் உபயப் பிராமணம் செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. உபயப்பிரமாணம் என்பது கோயிலுக்கு அளிக்கப்பட்ட பொருளை கொடையாளியிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதன் வட்டியால் கோயிலுக்குச் செய்யப்பட்ட தானத்தை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் உடன்படிக்கையாகும் கொடையளித்தவர் பெயரும் அவர் அளித்த தானம் பற்றியும் கூறும் பகுதி கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>கொருக்கை
- விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை திருவீரட்டானமுடையார் கோயில் ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களும் ஸ்ரீகாரியஞ் செய்வார்களும் தேவகன்மிகளும் கோயிற் கணக்கரும் பெரிய தேவர் [இரண்டாம்] இராஜராஜன் காலத்தில் கொடுத்த தானத்தை மீண்டும் (மூன்றாம்] குலோத்துங்கன் காலத்தில் இவ்வூர் அபிமான பூஷனுக்கு உபயம் பண்ணி உறுதி செய்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
நாகப்பட்டினம்>தரங்கம்பாடி>மேலப்பாதி
- கல்வெட்டின் முன்பகுதி கட்டடத்திற்குள் மறைக்கப்பட்டுள்ளது. அரசனுடைய நேர்முக ஆணை இது குலோத்துங்க சோழக் கெணியாதராயனின் வேண்டு கோளுக்கிணங்க, இராஜாதிராஜ வளநாட்டு, வீதிவிடங்கச் சதுர்வேதி மங்கலத்திலுள்ள உடையரர் வீமேஸ்வரதேவர் கோயிற் தேவகன்மிகளுக்கும் ஸ்ரீமாகேசுரக் கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் அரசன் ஆணையாக அரங்கற்குடியில் உள்ள குளம் செங்கழுநீர்க்குளமாக வீமேசுரதேவர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டதால் தேவதான நிலத்துக்கு நீர் இறைக்க இயலாமல் போனதால் நிலத்துக்குத் தேவையான நீரும் இறைத்துக் கொண்டு, செங்கழுநீர்ப்பூவும் இறைவனுக்குப் பயிரிட்டுக் கொள்ள வேண்டுமென ஆணையிடப்படுகிறது. இவ்வாணையைத் திருமந்திர ஓலை நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பவன் எழுதியுள்ளான்.
நாகப்பட்டினம்>மயிலாடுதுறை>ஆத்தூர்
- கல்வெட்டின் இடையே சில பகுதிகள் கட்டடத்துள் மறைந்துள்ளன. ஸ்ரீஇராஜநாராயண சதுர்வேதி மங்கலத்து இராஜராஜச்சேரி ஆத்ரயன் ஆராவமுது கூத்த பிரான் பட்டனும் அவன் தாயும் திருவிடைத்திட்டையுடையார் கோயில் ஆதி சண்டேஸ்வர தேவகன்மிகள், ஸ்ரீகார்யம் செய்வார்கள். ஸ்ரீமாமேஸ்வரக் கண்காணி செய்வார்கள் ஆகியோர் வசம் நிலத்தை விற்றுக் கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>பாபநாசம்>நல்லூர்
- திருநல்லூர் நாயனார் கோயிலோடு பணித்தொடர்புடைய பலர் இலக்ககர்) இவ்வூரில் உள்ள திருவகம்படிப் பிள்ளையாருக்கு அழுதுபடிக்கும், திருப்படி. மாற்றுக்கும் நிவந்தம் செய்ய வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளின்படி, இக்கோயில் சைவாசாரியம் செய்யும் சைவதிவாகர பிரமமாராயரும், ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி திருவீதி ஆண்டாரும், தேவகன்மி தில்லைநாயக பட்டனும், மாதான மங்கலமுடையாரும் சேர்ந்து செய்து கொடுத்த ஆவணத்தைக் குறிக்கிறது. அதன்படி, திருமடை விளாகத்தில் கிழக்குத் திருவீதியின் வடசிறகில் குடியினறிக் கிடந்த காலிமனை சண்டேஸ்வரப் பெருவிலையாக (ஏலவிற்பனை) விற்கப்பட்டு, அந்தப் பணத்தின் மூலம், விநாயகரை திருவீதி எழுந்தருளச் செய்தல், அமுது செய்தல் ஆகியன மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிள்ளையார் பெயரில் நிலம் வாங்கப்படுமானால், அதன் வருவாயில் இருந்து, விஷு, அயனம், சங்கராந்தி ஆண்டுத் திருநாள். மாசித் திருநாள் ஆகிய நாள்களின் சிறப்பு வழிபாட்டுகளும், பரிகலன்கள் மற்றும் அழுதுபடியும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றியும், பிள்ளையார் கோயிலின் அருகில் உள்ள நிலம், அக்கோயிலில் பூசை செய்யும் நெற்றிக்கண் பட்டனுக்குக் காணியாக அளிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்புகலூர்
கோனேரின்மை கொண்டான் ஆட்சி காலத்தில் இவ்வூர் திருப்புகலாருடையான் தேவகன் மிகளுக்கும், ஸ்ரீமாகேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும், கெநாயகம் செய்வானுக்கும், இக்கோயில் திருப்பொய்கைக்கு மேலக்கரையில் உள்ள திருக் காமீஸ்வரமுடையார் கோயிலுக்கும் நிமந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள நிலங்களை அந்தராயம், பாட்டம் உட்பட தேவதான இறையிலியாக கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
தஞ்சாவூர்>நன்னிலம்>பாவட்டாக்குடி
பாவடைக்குடி என்ற தியாக வினோதநல்லூரிலுள்ள வீரராஜேந்திரன் என்ற திருவீதியில் எழுந்தரளியிருக்கும் சுப்ரமணியப் பிள்ளையார் கோயில் காரியங்களை கவனித்துக் கொள்வார்களும், ஸ்ரீமஹேஸ்வர கண்காணி (மேற்பார்வையாளர்) செய்வார்களும் குறிப்பிடப்படுகின்றனர். அதன் காரணத்தை தெரிந்துகொள்ள இயலாதவாறு கல்வெட்டு பாதியுடன் நின்றுவிட்டது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருப்பாம்புரம்
மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பத்தைந்தாவது ஆட்சியாண்டைச் சேர்த்தது இக்கல்வெட்டு, திருப்பாம்புரமுடையார் கோயில் தேவரடியாரில் உடையளான நாற்பத்தெண்ணாயிரமாணிக்கம் என்ற பெண், இக்கோயிலில் திருவாசுர தாயனாரையும், பெரிய தேவரையும், நாச்சியாரையும் எழுந்தருளுவித்த செய்தியும் அக்கோயில் மாஹேஸ்வரர்கள், அத்தேவரடியார் பெண்ணுக்கு சில உரிமைகள் வழங்கிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. திருமார்கழி திருவாதிரை, திருவெம்பாவை, எழுப்புப்பாவை ஆகியவைகள் கூறப்படுகின்றன. இக்கல்வெட்டில் கோயில் கணக்கு, ஸ்ரீகாரியம் செய்பவன், மாஹேஸ் வரக் கண்காணி ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
தஞ்சாவூர்>நன்னிலம்>எண்கண்
இக்கல்வெட்டின் ஆரம்பமும், முடிவும் காணப்படவில்லை. குலோத்துங்கச் சோழ தேவனின் 5-ஆவது ஆட்சியாண்டில், தெற்குப்பை மஹாசபையோர் எண்கண்ணிலுள்ள விண்சாருடையார் கோயிலுக்கு, இக்கோயிலின் காணி உடைய சிவபிராமணர்களுக்கும், ஸ்ரீமாகேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும், இருபத்தியிரண்டு காசுக்கு நிலம் விற்று இறையிலி செய்துகொடுத்த செய்தியும். நிலத்திற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
மூன்றாம் இராஜராஜ சோழனின் ஏழாவது ஆட்சியாண்டில் மருங்கூர் ஊரார் நிலம் வாங்கி உத்தராபதி நாயனார்க்கும் சிறுத்தொண்ட தேவர்க்கும் இறையிலியாக ச€ீமாகேஸ்வர கண்காணி செய்வார், சீகாரியஞ்செய்வார், தேவர்கந்மி; கோயில் கணக்கன், ஆகியோரிடம் நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டிருக் Hang. கல்வெட்டின் இறுதிப் பகுதி சிதைந்து காணப்படுகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திரிச்செங்காட்டங்குடி
முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்து ஐந்தாவது ஆட்சியாண்டில் Boas செங்காட்டங்குடி ஊரார். உத்தராபதஸ்வரர் கோயிலில் உள்ள கணபதீஸ்வரம் உடையார்க்கும், உத்தராபதி நாயகர்க்கும், அர்த்தசாமக்கால பூசைக்கு செங்கழுநீர் திருப்பள்ளித்தாமம் மாலையாக்கி சாத்தவும், செங்கழுநீர் படர்த்த நீர்நிலையும், நீர்பாய்க் குளமும், கரையும் ஆக்கவும், திருப்பள்ளித்தாம நந்தவனம் அமைக்கவும், இக்கோயில் சணகேஸ்வரகண்காணிகளுக்கும் (மேற்பார்வையாளர் கள்), ஸ்ரீகாரியஞ்செய்வார்களுக்கும் (நிர்வாகத்தார்), கோயில் கணக்கனுக்கும் இறையிலியாக நிலம் ஒன்றே ஒருமா அளித்ததாகக் கூறப்படுகின்றது.