1146 results found
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் துற்கையார் அகரம் ஆனஇராஜேந்திர சோழச் சருப்பேதி மங்கலத்துப் பிடாகைகளான சிறுகடம்பூர், ஆரலூர், பாப்பநல்லூர், கூத்தனூர், கொடி யாலி, மணக்குடி, ஆலைவேலி ஆகிய ஊர்களில் உள்ள நிலங்கள் வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு அச் சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்கள் ஊர்க்கீழ் இறையிலியாக அளித்தார்கள். அவ்வாறு அவர்கள் கொடுத்த நிலங்களில் கடமை, குடிமை ஆகிய வரிகளை மேற்கூறிய பிடாகைகளாகிய ஊர்களின் ஊரவர்கள் இறையிலி செய்து கொடுத்து கையெழுத்தும் இட்டுக் கொடுத்தனர்.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் அமைந்துள்ள. வெள்ளைப் பிள்ளையார்க் கோயில் தானத்தார் [ கோயில் நிர்வாகிகள்] பலவகையிலும் துன்பப்பட்டும் நோய்வாய்ப்பட்டும் வந்த காரணத்தினால் அந்த ஊரைக் காப்பதற்கும், உலகுடையப் பெருமாளாகிய அரசனின் உடல் நலன் சிறக்கவும், வெற்றியடையவும். வெள்ளைப் பிள்ளையார்க்கு பூசைக்கும் திருப்பணிக்கும் திருநாமத்துக் காணியாக நிலம் தர வேண்டும் என்று ஆனாங்கூரைச் சேர்ந்த ஒரு அதிகாரி வேண்டுகோள் விடுத்தமையால், சபையார் கூடி விவாதித்து சம்மதம் தெரிவித்து ஊர்க்கீழ் இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. நிலத்தின் அளவுகளும் அதிலிருந்து வரும் நெல்லின் அளவுகளும் எண்ணாலும் எழுத்தாலும் கொடுக்கப்பட்டுள்ளன. நிலத்தின் எல்லைகளும், கையெழுத்திட்டுள்ள சபை உறுப்பினர்களின் பெயர்களும் காணப்படுகின்றன.இவ்வாறு சபையோர் திருநாமத்துக்காணியாக நிலம் கொடுப்பதென்று விவாதம் செய்த இடமும் கூறப்பட்டுள்ளது. விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு துற்கையார் அகரமான ராஜேந்திர சோழச் சதுர்வேதி மங்கலத்து அபிமுத்தீசுர முடையார், கோயில் திருமண்டபத்தில், பெருங்குறி சபை கூடி முடிவெடுத்தது. இவ்வாறு கூட்டம் கூடுவதை, தன்மிசெய்து அதாவது பறையறைந்து தெரிவிக்கப்பட்டது என்பதும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையார்க்கு ஸ்ரீபராந்தக சதுர்வேதி மங்கலத்தின் பிடாகை ஜனநாத நல்லூரில் திருநாமத்துக் காணியான நிலத்தில் இவ்வூர் சபையர்ர் ஊர்க்கீழ் இறையிலி இட்ட செய்தியும் அதன்படி வருகிற நெல்லுக்கு தலைமாறாக வேறு பல இடங்களில் நில மளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வினாயகப்பிள்ளையார் கோயில் வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக ஊர்க்கீழ் இறையிலியாக இட்ட நிலத்திலிருந்து அறுபது கலம் கொடுக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் வானரையன் விக்கிரமசோழனான ராஜகம்பீர வேளான் என்பவன். இக்கோயிலில் உள்ள ஞானசம்பந்தன் மடத்தில் வந்தமர்ந்து, இம்மடத்துக்குக் கீழ் புறம் உள்ள சொன்னவாறறிவான் திருநந்தவனத்திலே பூப்பறித்து நூறு, திருப்பள்ளித்தாமம் ஆக்கி இக்கோயில் இறைவனுக்கு அளிப்பதற்கு, இம்மடத்தைச் சேர்ந்த ஆண்டார்கள் மூவருக்கு அமுதுபடி உள்ளிட்ட செலவினங்களுக்கு மூன்றுமாவினால் குழி 1536-ம், நத்தமனை குழி நாற்பதும் பலரிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்நிலங்களுக்கு எல்லைகள் கூறும் போது முசுகுந்த விண்ணகர் எம்பெருமான் கோயில் திருவிடையாட்டம் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்புடையது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் திருவலஞ்சுழி இறைவனுக்கு வண்டுவாழ்குழலி சதுர்வேதி மங்கலத்தில் நிலத்தை விலைக்கு வாங்கி அகில்நாயகவிளாகம் என்ற பெயரால் தனி வளாகமாக்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தனி வளாகமாக சதுர்வேதி மங்கலத்திலிருந்து பிறித்தபோது அந்த வளாகத்தின் ஒரு பகுதி வண்டுவாழ் குழலி சருப்பேதி மங்கலம் என்நீ ஊரின் உட்புறத்தில் திருநந்தவனப் பகுதிகளும் சேருவதால் அதற்கு மாறாக அச்சருப்பேதி மங்கலத்திற்கு வேறோர் இடத்தில் நிலம் தரப்பட்டது. அந்த இடம் திருக்கை விலையிட்ட பற்று என்றும் இப்பற்று இவ்வூர் துரோகிகளிடமிருந்து திருக்கைப் பற்றாக பெறப்பட்டது என்றும் தெரிய வருகிறது. இந்த நிலங்களின் எல்லைகளாக அரசர் அரசியர் பெயரில் வாய்க்கால்களும் வதிகளும் கூறப்பட்டுள்ளன.கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. இறுதிப் பகுதி கிடைக்கவில்லை.