Skip to main content

1128 results found

தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>கொளப்பாடு
திரிபுவனவீரதேவனான மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதலாண்டு 45-ஆவது நாளில் அழகிய கூத்தர் எழுந்தருளுவிக்கப்பட்டதையும் இராஜேந்திர சோழனின் 8-ஆவது ஆட்சியாண்டில் அவ்வழகய கூத்தருக்குத் திருவமுது மற்றும் வேண்டும் நிவத்தங்களுக்கு இறையிலியாகக் கொடுத்த நிலம் பற்றிக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>கீரக்களூர்
கல்வெட்டின் தொடக்கம் இல்லை. எனினும் இறைவனின் அமுதுபடிக்காக வேதவன நாயகநம்பி என்பான் நிலம் அளித்ததைக் குறிக்கிறது. உ. லோகம இத்த மங்கலம் அவனது ஊரெனத் தெரிகிறது, அந்நிலத்தின் எல்லைகள் குறிக்கப்படுகின்றன.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>கீரக்களூர்
இக்கல்வெட்டில் ஊர் நத்தத்து இறையிலி மனைக்கு எல்லைகளாகச் சில தெருக்கள், நிலம் ஆகியவைகளும் அவ்வாறு கூறப்படும் நிலம் மும்மாவரைக்கு அந்தராயம் எனும் வரி செலுத்துவது பற்றியும் கூறப்படுகின்றன. யாரால் எதற்குக் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள இயலவில்லை கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>கீரக்களூர்
மன்னன் பெயர் காணப்படாத இக்கல்வெட்டு, இவ்வூர் சபையார், பொன்னைப் பெற்றுக் கொண்டு ஊர் நிலத்தை, இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>கச்சனம்
Tribhuvana- viradeva, who having taken Mudura, Ilam (Ceylon), Karuvur, and the crowned head of the Pandya, was pleasen to perform the anointment of Victors -- 40th year Mithuna, su, ashtami, Wednesday, Hasta - Tamil. Another agreement by the Sivabrahrnanas கச்சனத்தைச் சேர்ந்த நிலப்படி உடையான் சிவந்தவனப்பெருமான் என்பவரிடமிருந்து 2, 800 காசுகளைப் பெற்றுக் கொண்டு சிவப்பிராமணர்கள் இறைவனுக்கு விளக்கு எரிக்க ஒப்புக்கொண்ட செய்தி உள்ளது.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>கச்சனம்
Ends of lines 1 - 4 are lost. Registers a similar agreement to burn a lamp for the amount received from Tillainayakan - Aludaiyan of Ariyalur. முதல் நான்கு வரிகளின் இறுதி காணப்படவில்லை, அரியலூர் ஆளுடையான் இல்லை நாயகன் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இறைவனுக்கு விளக்கெரிக்க ஒப்புக் கொண்டதைத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>கச்சனம்
Registers another agreement by the Sivabrahmanas to burn a perpetual lamp before the god, by turns, for the 100 Kasu received by them from the accountant of the temple சிவப்பிராமணர்கள் கோயிற்கணக்கரிடமிருந்து 100 காசினைப் பெற்றுக் கொண்டு இறைவனுக்கு நொந்தா விளக்கு எரிப்பதற்கு ஒத்துக் கொண்ட செய்தியைத் தருகிறது. .
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>கச்சனம்
Stones out of order. Begins with the Introduction etc. Registers an agreement by the Sivabrahmanas of the temple to burn a perpetual lamp before the God at Tirukachchanam in Arvalak-kurram, a division of Rajendrasola-Valanadu, for the 100 Kasu received by them froma certain individual. கல்வெட்டுச் சிதைந்துள்ளது. ராஜேந்திரசோழ வளநாட்டு, ஆர்வலக் கூற்றத்துத் திருக்கச்சனத்துக் கோயில் சிவப்பிராமணர்கள் தனியார் ஒருவரிடமிருந்து 100 காசினைப் பெற்றுக் கொண்டு இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிக்கச் சம்மதித்த செய்தி காணப்படுகிறது.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>கச்சனம்
- ராஜேந்திர சோழ வளநாட்டின் பகுதியான கச்சனப்பற்றிலுள்ள நிலங்களைச் சதுர்வேதிபட்டர்களுக்கு இறையிலி நிலமாகக் கொடுத்தது பற்றிக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>அகஸ்தியம்பள்ளி
- அகஸ்தியம்பள்ளி அகத்தியதேவர் திருமடத்தில் ஸ்ரீமாஹேஸ்வர பூசைக்குக் காணிகொண்டு கெளதமன் ஆண்டான் குன்றமெறிந்தார் இறையிலியாக நூற் றைம்பது பொன் கொடுத்தார் என்பதைக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>அகஸ்தியம்பள்ளி
- அரசன் உடல்நலம் பெறுவதற்காக திருவகத்தியான்பள்ளி உடையார் கோயிலில் திருவிழாகொண்டாடப்பட்டது. இத்திருவிழாவிற்காக ஐந்து வேலி நிலம் இறையிலியாக அளிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டுக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>அகஸ்தியம்பள்ளி
- திருச்செற்றி முற்றத்துச் சந்தானத்தைச் சேர்ந்த மடம் ஒன்றுக்கு இறையிலி நிலம் கொடையாக அளிக்கப்பட்டிதைக் குறிக்கிறது.
திருப்பூர்>உடுமலைப்பேட்டை>கல்லாபுரம்
- உலகுடைய பிராட்டிச் சதுர்வேதி மங்கலத்து விக்கிரமசோழ விண்ணகர் எம்பெருமானுக்கு திருப்போனகம்இறைவனுக்கு படைக்கும் உணவு) செய்ய 23 அச்சுப் பொன்னினை கோயில் பண்டாரத்தில் அளித்து, ஒரு பருவத்திற்கு இருபத்து முக்கல நெல் அளிக்க இவ்வூர் சபையாருக்கு அரசன் ஆணையிட்டுள்ளான்.
திருப்பூர்>தாராபுரம்>தளவாய்பட்டணம்
- சிதைந்த கல்வெட்டு. வீரசோழன் திருமடைவிளாகத்து கைக்கோளரில் கண்டன் கணடறுசதி என்பவன் இக்கோயில் இறைவியான நானாதேசி நங்கை என்றழைக்கப்படும் பிடாரி அம்மனுக்கு சந்தியா தீபம் ஒன்று வைக்க துளை கழஞ்சு பொன் வைத்தச் செய்தி.
திருப்பூர்>தாராபுரம்>தாராபுரம்
- இக்கோயில் இறைவி பெருங்கருணைச் செல்விக்கு அமுதுபடிக்காக நிலக்கொடை அளித்தச் செய்தி திருக்கடைக்குறிச்சி, நீர் பாய்கிற கவரூ ஆகிய சொற்கள் குறிப்பிடத்தக்கவை.
திருப்பூர்>தாராபுரம்>கொழிஞ்சிவாடி
- அரசன் அழகிய சொக்கநாத நாயனார்க்கு இறையிலியாக இவ்வூரிலுள்ள வீரசோழமன்னரையில் மூன்று மாக்காணி நிலம் அளித்தச் செய்தி.
திருப்பூர்>தாராபுரம்>கொழிஞ்சிவாடி
- சொக்கநாத நாயினார் கோயில் திருக்காமகோட்ட நாச்சியார் அழகிய சொக்கியார்க்கு அரசன் இறையிலியாக இரண்டுமா அரைக்காணி நிலம் அளித்தச் செய்தி. வீரசோழ மன்னறை, குலோத்துங்க சோழ மன்னறை, குமணராயன் பற்று ஆகிய நிலப் பெயர்கள் குறிப்பிடத்தக்கவை.
திருப்பூர்>தாராபுரம்>கொழிஞ்சிவாடி
- சொக்கநாத நாயினார் கோயில் திருக்காமகோட்ட நாச்சியார்க்கு அரசன் இறையிலியாக ஆறுமா நிலம் அளித்த செய்தி.
திருப்பூர்>தாராபுரம்>பிரம்மியம்
- பெருமாள் வாளிலாரில் (அரசர்படை வாள்வீரர்) கேரளகேசரி அமரபயங்கரன் கோட்புலியார் என்பவன் இறைவன் நீராடுவதற்கு அன்றாடம் மூன்று குடம் நீர் கொண்டு வர பொற்காசுக் கொடை அளித்த செய்தி.
திருப்பூர்>தாராபுரம்>பிரம்மியம்
- அரசன் பிரமதேய சபை அளிக்க வேண்டிய இறை ஒரு கழஞ்சும் மேலும் இருபத்தெட்டுக் கழஞ்சும் சந்தனப்புறத் துக்காக அளித்துள்ளான்.