1146 results found
தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் துர்க்கை கருவறையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினுள் சென்று விட்ட தால் பாதி மறைந்த கல்வெட்டு. பள்ளியறை கல்வெட்டு. பள்ளியறை இறைவனுக்கு. உச்சியம் போது அமுது செய்வதனைக் குறிக்கிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் திருக்கீழ்க்கோட்டத்து இறைவனுக்குத் தொண்ணூற்று ஆறு ஆடுகளை விளக்கெரிக்க காரி விழுப்பரையன் என்பான் அளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் விசைய ராஜேந்திரனான முதலாம் இராஜாதிராஜன் காலத்தில், திருக்காரோண முடைய மகாதேவருக்கும், கன்னியாபிடாரிக்கும் மூலபருடையார் இறையிலி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதற்காக நூற்றுத் தொண்ணூற்று ஒன்பது கழஞ்சுப் பொன் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இவ்விலை யாவணத்தினை, திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் வெட்டியுள்ளனர். இதில் குறிப்பிடப்பெறும் இறைவன் கோயில் எங்குளது என அறிய இயலவில்லை.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் திருக்கீழ்க்கோட்டத்து இறைவனுக்கு எழுதிக்கொடுத்த நிலவிலை ஆவணம் இது. கல்வெட்டு சிதைந்துவிட்டதால் முழுச் செய்தியும் அறிய இயலவில்லை. இதைவிட சிறிது விளக்கம் கிடைப்பதால், இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையும் இத்துடன் தரப்படுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் மலைநாட்டு நெடும்புறையூர் நாட்டைச் சேர்ந்த. பூவங்கண்ணன் என்பான் திருக் கீழ்க்கோட்டத்து இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 25 பொன் அளிக்கக் கருதி, அதற்குப்பதிலாக நிலமாகக் கொடுத்துள்ளான்.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் மாடிலன் பட்டன் மகாதேவன் நாராயணன் என்பான் திருக்கீழ்க் கோட்டத்து இறைவனுக்கு நொந்தா விளக்குக்கும், சூரிய தேவற்கு, சிதாரிக்கும், கற்பூர விளக்குக்கும் வகை செய்ததைக் குறிக்கிறது. அதற்காக 30 மஞ்சாடிப் பொன் கொடுத்து அதன் மூலம் நிலம் வாங்கித் தந்ததைக் குறிக்கிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் வீரசோழத் தெரிஞ்ச கைக்கோளர் என்பார், தான் எழுந்தருளச் செய்த இறைவனுடைய ஸ்ரீபலிக்காக 70 ஈழக்காசுகளை அளித்து, அதில் வரும் வட்டியின் மூலமாக, ஆண்டுக்கு 60 கல நெல்லினை அளிக்க வகை செய்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இக்கல்வெட்டுள், பாண்டியன் தலைக்கொண்ட கோப்பரகேஸரி வர்மனின் மூன்றாம் ஆட்சியாண்டும் குறிக்கப்படுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் தஞ்சாவூர் கற்றளிப்பிராட்டியார் வேளத்துப் பெண்டாட்டி மாநெதநங்கண்டி 20 காசினை மூலபருடைப் பெருமக்களிடம் அளித்துள்ளாள். அதனைக் கொண்டு காவிரியிலிருந்து மூன்று போதும் இறைவன் நீராட்டுக்கு நீர் கொண்டு தருவான் ஒருவனுக்கு போகமாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இக்கல்வெட்டில் பஞ்சாங்கக் குறிப்புக்கள் ஆண்டு, திங்கள், பக்கம், பொழுது, பருவம் என்ற முறையில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் ஆழ்வான் திருப்புறம்பியமுடையான் ஆன செம்பியன் பல்லவரையன் என்பான் கீழ்க்கோட்டமுடையார் கோயிலின் கிழக்குத் திருச்சுற்று மாளிகையில், தன் பெயரில் திருப்புறம்பியமுடையாரெனும் இறைவனை எழுந்தருளச் செய்தான். விறைவனுக்குப் பூசை, திருவமுது. திருவிளக்குகள் இவைகளுக்குள். பூசை செய்யும் தம்பிமார்களுக்கு நிமந்தத்திற்குள், திருக்கீழ்க்கோட்டமுடையாருக்கு மகர தோரணம் செய்து அளிப்பதற்கும் ஆகிய திருப்பணிகளுக்குக் கோவிற் பண்டாரத் தில் 17, 000 காசுகள் அளித்துள்ளான். இச்செய்தியினை இக்கல்வெட்டுக் குறிக்கிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>கும்பகோணம்
தஞ்சாவூர் ஆற்றாருடையான் அரையன் ராஜராஜ தேவனான வாணகோவரையன் என்பான் ராஜராஜீஸ்யரமுடையார் மாநிலைத் திருநந்தவனம் என்னும் பெயரால் நந்தவனம் அமைத்ததையும், இக்கோவிலும் திருமுற்றமும் திருமடை விளாகமும் தீர்த்தக் குளமும், திருநந்தவனமும், உள்ளிட்டவைகளுக்கு நிலம் இறையிலியாக வழங்கியதையும் குறிக்கிறது. நிலத்தின் எல்லைகள் குறிக்கப்படுகின்றன. கல்லெட்டின் இறுதிப்பகுதியில் அளக்கவேண்டிய நெல்லின் அளவைகள் குறிக்கப்படுகின்றன. முதற்குலோத்துங்க சோழனின் 16-ஆம் ஆட்சியாண்டு குறிக்கப்படுகிறது.கல்வெட்டின் நடுநடுவே புதிய கட்டடங்களை எழுப்பிவிட்டதால் தொடர்ச்சியாகப் படிக்க இயலவில்லை.