1146 results found
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கல்வெட்டுச் சேதமடைந்துள்ளது. அருமொழிதேவ வளநாட்டு, அளநாட்டு கொழவாய் மங்கலத்து ஊர்த்தலைவன் ஐய்யந் செட்டியார் மகள் செட்டி ராஜமாணிக்கத்தார் எனும் நுளம்பமாதேவியார் என்பவள் திருவத்தியூர் ஆழ்வாருக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் தானமளித்துள்ளாள். மேலும் இறைவனுக்கு காதணி (திருவாளி) தானமளித்துள்ளாள். இவளது முழுப்பெயர் ஜெயங்கொண்ட சோழவீர நுளம்பமாதேவியாராந செட்டி ராஜமாணிக்கத்தார் என்பதாகும். இவள், நிலங்குடிதாங்கியாரான ஜயங்கொண்ட சோழ வீரநுளம்பரின் மனைவியாவாள்.செங்கல்பட்டு>தாம்பரம்>மாடம்பாக்கம்
செங்கல்பட்டு இவ்வூர் சிற்றெரி உடைய நாயனார் கோயிலுக்குத் திருவிளக்குகள், அமுதுபடி, திருநாள் உபயங்கள் போன்றவற்றிற்குத் தானமாக நிலங்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதிலிருந்து வரும் வருமானம் அச்செலவுகளுக்கு போதவில்லையாதலால், கோப்பெருஞ்சிங்கதேவரின் 12-வது ஆட்சியாண்டில் இவ்வூரின் வடகூறில் நீர்நிலம் கொல்லைநிலம், மனைகள், மனைப்படைப்பைகள் உள்பட மூவாயிரம் குழி நிலமும் திருநாமத்துக்காணியாக மகாசபையார் பிரமாணம் பண்ணிக் கொடுத்தனர்.இந்நிலத்தில் மகாசபையோரே வேண்டும் பயிர் செய்து கொண்டு சில வரிகளையும் தாங்களே செலுத்தி இறையிலி செய்வதாகவும் கூறியதுடன் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து விற்க வேண்டிய சூழல் ஏற்படுமாயின் இக்கோயில் பண்டாரத்துக்கே விற்கக் கடவோம் என்றும் உறுதியளித்துள்ளனர். அதன்படி இப்போது கோயிலில் கல்வெட்டிக் கொடுத்தோம் என்று மஹாஸபையார் தெரிவித் துள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் கொடுக்கப்பட்ட மேற்கூறிய நிலங்களும் மனைகளும் பற்றிய ஆவணம் கல்லில் வெட்டப்படாமல் இருந்ததால் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பொறிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.