விழுப்புரம்திருநன்தீசுரமுடைய தேவர் என்ற இறைவன் பெயர் காணப்படுகிறது. முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி ஒரு துண்டுக்கல்வெட்டில் உள்ளது. ஊரின் பெயர் வயிரமேகபுரமான ஜனநாதநல்லூர் என்ற குறிப்பும் உள்ளது.
விழுப்புரம்பின்பகுதி சிதைந்த கல்வெட்டு. வியாபாரி சேந்தனூர் ஆழ்வான் நக்கன் அறிவைகள் கற்பகவேளான் என்பவர் நந்தா விளக்கெரிக்க நகரத்தாரிடம் நிலம் (?) பெற்றுக் கோயில் சிவபிராமணரிடம் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது.
விழுப்புரம்சிதைந்து பிரிந்து போன கல்வெட்டு. கோயிலின் பெயர் சேதிகுல சிந்தாமணீஸ்வரம் என்றுள்ளது. பூசைக் கலன்கள் செப்பு கிடாரம், செப்புக்குடம் ஆகியவை தேய்ந்து போனமை குறித்த செய்தி சொல்லப்படுகிறது.
கள்ளக்குறிச்சிபாடல் வடிவில் உள்ளது. தேன் நிறைந்த மலர்ச் சோலைகளும் கரும்பு வயல்களும் நிறைந்த அழகிய சிறுவை என்னும் ஊரின் ஏரிக்கு மல்லைக்கலிங்கன் மான்பரிபாலன் என்பவர் மதகு அமைத்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்அடுத்தடுத்து வைத்துக் கட்டப்பட்ட துண்டுக் கல்வெட்டுகள். இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி உள்ளது. வழிபாட்டு அமுது படையல் செய்ய சிவபிராமணர்கள் ஒப்புக்கொண்டமை குறிக்கப்பட்டுள்ளது.