செங்கழுநீர்ப்புறம்
குளத்தில் செங்கழுநீர் எனும் குவளை மலர் வளர்த்து, நாள்தோறும் அலரெடுத்து மாலையாக்கிக் கோயிலுக்குத் தருபவனுக்குரிய வருவாயாக அமைக்கப் பெறும் மூலதனம். இறையிலி நிலம்.
திருவண்ணாமலை உடைய நாயனார்க்கு நாள் க - க்கு உயரு திருச் செங்கழுநீர் திருப்பள்ளித்தாமஞ் சாத்திவிக்க. கடவராகவும். இதுக்குத் திருச்செங்கழு நீர் செய்கிற குவளை கிழவனுக்கு ஜீவிதத்துக்கு சீபண்டாரத்திலே ஒடுக்கின காசு 2000 - திருச்செங்கழு நீர்புறமாகக் கொடுத்தோம்.
தெ. கல். தொ. 8. கல். 93