தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (திருக்கண்டியூர்-வீரட்டம் 1 results found)
திருக்கண்டியூர் வீரட்டம்

திருவையாற்றுக்குத் தென்பால் உள்ள திருக்கண்டியூரில் அமைந்த கோயிலும் வீரட்டான மாகும். பிரமதேவனது செருக்கை அழிக்கக் கருதிய சிவபெருமான் அவன் சிரங்களில் ஒன்றையறுத் திட்ட செய்தியை இப் பதியோடு பொருத்தித் தேவாரம் போற்றுகின்றது. அச் செயலை ஊரோடு நாடறியும் என்று அருளினார் திருநாவுக்கரசர். 5

5.

பண்டங் கறுத்ததொர் கையுடையான்
படைத்தான் தலையை உண்டங் கறுத்ததும் ஊரொடு
நாடவை தானறியும்
- திருக்கண்டியூர்ப் பதிகம், 3.