திருக்கோயில்களில் கருவறைவாயிலினைத் தொடர்ந்து இணைப்பாக அமைக்கப்படும் பொருள் காப்பகப் புரையிடம். தெய்வப் பிரசாதத்தினை மரியாதையுடன் பெறும் கருவறைமுகப்பிடம்.
தேவர் திருமுகம் வந்தமையில் இத்திருமுகம் திருக்கை ஒட்டிப் பண்டாரத்திலே கோத்துக் கொண்டு(சேர்த்துக் கொண்டு)
தெ. கல். தொ. 12. கல். 215
இக்கோயிலிற் திருக்கை ஒட்டி திருமுன் ஓதுகையும்
தெ. கல். தொ. 7. கல். 69
விலைகொண்ட சாதனங்களும், நிலங்களில் பங்கு வரிகழிய பெரும்பற்றப் புலியூர் மூல பருஷையார் எழுதின நியோகமும் திருக்கை ஒட்டி பண்டாரத்து ஒடுக்கவும் இப்படிக்கு திருமாளிகை யில் கல்வெட்டக் கடவதாக