கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கண்காணி-நாயகம் 1 results found)

கண்காணி நாயகம்

: மேற்பார்வை யிடுவோர் தலைமை உத்தியோகம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கண்காணி-நாயகம் 3 results found)

கண்காணி நாயகம்

:
  • கிராம அல்லது ஊர் நிர்வாகங்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன்.

ஸ்ரீகார்யக் கண்காணி நாயகம்

:
  • கோயிற் காரியங்களை ஒழுங் காக நடத்துவிக்கும் அதிகாரி ஸ்ரீகார்யம்; ஸ்ரீகார்யம் தவறாமல் நிகழ்வதை ஆராய்பவன் ஸ்ரீகார்யக் கண்காணி; இவர்கள் இருவர் செயலும் குறையின்றி முறையாக நிகழ ஆராய்ந்து தணிக்கை செய்யும் சலைமை அதிகாரி நாயகம். எனவே கோயிற் காரியங்களின் நிர்வாகத் தலைமைத்துறை அதிகாரி ஸ்ரீகார்யக் கண்காணி நாயகம் என்று பெயர் பெற்றார்.
    முதல் இராசராசன் காலத்தில், தஞ்சைப்பெரிய கோயிலுக்கு இருந்த ஸ்ரீகார்யக்கண்காணி நாயகம்.

  • பாண்டி நாடான ராஜராஜ மண்டலத்துத் திருக்கானப் பேர் கூற்றத்துப் பாளூர்ப்பாளூர் கிழவன் அரவணையான் மாலரி கேசவன், என்பவனாவன்

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 36

நாடுகண்காணி நாயகம்

:
  • சோழராட்சியில். அரசு அமைத்த நாட்டு அதிகாரிகளின் செயல்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன். இவ்வதிகாரி எவ்விடத்தும், யாரிடமும், எக் கணக்கினையும் ஆய்வு செய்வதற்கு அனுமதி பெற்றவன்.

  • இந்நாடு உள்ளிட்ட நாடுகள் கண்காணி நாயகம் செய்கின்ற வைப்பூர் உடையான்

  • முதல் இராசராசன்

  • தெ. கல். தொ. 18. கல். 328

  • திருக்கோவலூர் திருவீரட்டானமுடைய மஹாதேவர் ஸ்ரீ பண்டாரம், இன்னாடு கண் காணி நாயகஞ் செய்யும் இளமங்கல முடையான நிச்சல் ஸ்ரீயாரூர் இத்சேவர் ஸ்ரீ பண்டாரஞ் சோதிச்சு ஸ்ரீபண்டாரப் பொத்தகப்படி நிலைவுருக் கண்டு.

  • முதல் இராசேந்திரன், கி. பி. 1018

  • தெ. கல். தொ. 7. கல். 891

  • சேநாபதி முடிகொண்ட சோ விழுப்பரையர்க்காக நாடு கண்காணி நாயகஞ் செய்கின்ற கந்சி சீ காருடையான்

  • (புதுக். கல். 90)